ஆந்திராவில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு: துணை முதல்வராக பவன் கல்யாண் நியமனம்
ஆந்திராவில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு: துணை முதல்வராக பவன் கல்யாண் நியமனம்
UPDATED : ஜூன் 14, 2024 03:22 PM
ADDED : ஜூன் 14, 2024 03:20 PM

அமராவதி: ஆந்திராவில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பவன் கல்யாண் துணை முதல்வராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம்( ஜூன் 12) பதவியேற்று கொண்டார். பவன் கல்யாண் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன்படி முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் சட்டம் ஒழுங்கு துறை உள்ளிட்ட சிலவற்றை தன் வசம் வைத்துள்ளார்.
பவன் கல்யாண் துணை முதல்வராக நியமிக்கப்பட்டதுடன், அவரிடம் பஞ்சாயத் ராஜ், ஊரக வளர்ச்சி, ஊரக குடிநீர் விநியோகம், சுற்றச்சூழல், வனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷிடம் மனித வள மேம்பாடு, ஐடி ஆகிய துறைகளும்
பையவுலா கேசவிடம் நிதித்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.