தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்; நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்; நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்; நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்


ADDED : ஏப் 15, 2025 12:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2025 12:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜம்மு; அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. நீண்ட வரிசையில் யாத்ரீகர்கள் காத்திருந்து முன்பதிவு செய்து வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோவில் பனிலிங்கத்தை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். பனியால் உருவாகும் சிவலிங்கமே அதன் சிறப்பு என்பதே காரணம்.

இந் நிலையில் அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு இன்று (ஏப்.15) தொடங்கி உள்ளது. யாத்திரையில் கலந்து கொள்ள ஆர்வம் கொண்ட பலரும், நீண்ட வரிசையில் நின்று பெயரை பதிவு செய்து வருகின்றனர்.

முன்பதிவுக்கு வந்திருந்த யாத்ரீகர் சோனியா மெஹ்ரா என்பவர் கூறுகையில். அமர்நாத் யாத்திரை செல்ல நான் ஆர்வமுடன் காத்திருக்கிறேன். இப்போது இரண்டாவது முறையாக யாத்திரை செல்கிறேன் என்றார்.

ரோகித் என்ற யாத்ரீகர் கூறுகையில், யாத்திரை செல்ல முன்பதிவு செய்ய வந்துள்ளவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளனர் என்றார்.

இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ஜூவை 3ம் தேதி தொடங்குகிறது. பாகல்ஹாம், பல்டால் ஆகிய இரு வழிகளிலும் ஒருசேர யாத்திரை தொடங்க உள்ளது. ஆக.9ம் தேதி யாத்திரை நிறைவடைகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us