UPDATED : செப் 18, 2024 07:04 PM
ADDED : செப் 18, 2024 06:56 PM

புதுடில்லி: பதவி ஏற்றது முதல் இதுவரை சுமார் 3 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
உதாரணமாக,
* மகாராஷ்டிராவில் வாதவன் துறைமுக திட்டம். இதன் மதிப்பு ரூ.76,200 கோடி
*பிரதமர் கிராம சாலை திட்டம். இதன் மதிப்பு ரூ..49000 கோடி. இதனால் நாடு முழுவதும் 25000 கிராமங்கள் பயன்பெறும்.
*வேலை வாய்ப்புகளை அதிகரிக்க ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு
*தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.50,600 கோடி.
*12 புதிய ஸ்மார்ட் தொழில் நகரங்கள்
*கடந்த 100 நாட்களில் மட்டும் துவக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 15.
* ஹிமாச்சலையும் லடாக்கையும் இணைக்க இமயமலையில் சுரங்கப் பாதை திட்டம்.இந்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டால் புதிதாகக 4.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

