ADDED : செப் 10, 2025 03:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்:கேரளாவில் போதை பொருள் கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து நோயாளியுடன் வந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸை கண்ணுார் அருகே தளிப்பரம்பு பகுதியில் நிறுத்தி கலால் துறையினர் சோதனை செய்தனர். அப்போது டிரைவரிடம் இருந்து 430 மில்லிகிராம் எம். டி. எம். ஏ. போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.இதையடுத்து அதே பகுதி டிரைவரான முஸ்தபாவை 37, போலீசார் கைது செய்தனர்.
அவர் கண்ணுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.