sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியை குப்பை கிடங்காக மாற்றிவிட்டார்; கெஜ்ரிவால் மீது அமித் ஷா குற்றச்சாட்டு

/

டில்லியை குப்பை கிடங்காக மாற்றிவிட்டார்; கெஜ்ரிவால் மீது அமித் ஷா குற்றச்சாட்டு

டில்லியை குப்பை கிடங்காக மாற்றிவிட்டார்; கெஜ்ரிவால் மீது அமித் ஷா குற்றச்சாட்டு

டில்லியை குப்பை கிடங்காக மாற்றிவிட்டார்; கெஜ்ரிவால் மீது அமித் ஷா குற்றச்சாட்டு

5


ADDED : ஜன 30, 2025 10:15 PM

Google News

ADDED : ஜன 30, 2025 10:15 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியை குப்பை கிடங்காக கெஜ்ரிவால் மாற்றிவிட்டார். யமுனை நதியை மாசுபடுத்தி விட்டார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேசியதாவது: ஆம் ஆத்மி அரசு தவறான நிர்வாகத்தை நடத்தி வருகிறது. தலைநகரின் மோசமான நிலைக்கு கெஜ்ரிவால் நிர்வாகமே காரணம். டில்லியை குப்பை கிடங்காக கெஜ்ரிவால் மாற்றிவிட்டார். யமுனையை மாசுபடுத்தி விட்டார். நகரின் உள்கட்டமைப்பு சிதைந்து வருகிறது.

டில்லியில் சரியான கழிவுநீர் வசதிகள் இல்லாததால் மழைக்காலத்தில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. கடந்த சில ஆண்டுகளில், டில்லியில் மழையால் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இது வேறு எங்கும் நடக்கவில்லை, ஆனால் ஆம் ஆத்மி கட்சி பொறுப்பை ஏற்காமல் சாக்குப்போக்குகளை தொடர்ந்து கூறுகிறது. ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் தனது தோல்விகளை மறைக்க அற்ப அரசியலை கெஜ்ரிவால் செய்து வருகிறார்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக யமுனையில் விஷம் கலந்திருப்பதாக கெஜ்ரிவால் பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். டில்லி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதில் ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது. யமுனை நதி முன்னெப்போதையும் விட மாசுபட்டுள்ளது. மேலும் மக்கள் அசுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மக்கள் தன்னை நிராகரிப்பார்கள் என்று கெஜ்ரிவால் சாக்குப்போக்கு கூறுகிறார். டில்லி வாக்காளர்கள் பிப்ரவரி 5ம் தேதி ஆம் ஆத்மி கட்சியை அகற்றி பா.ஜ.,வை ஆட்சிக்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளது. பா.ஜ., வெற்றி பெற்றால் மாற்றம் ஏற்படும். டில்லியை உலகின் முதல் தலைநகராக மாற்றுவோம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.






      Dinamalar
      Follow us