sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்: சொல்கிறார் ராகுல்

/

அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்: சொல்கிறார் ராகுல்

அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்: சொல்கிறார் ராகுல்

அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்: சொல்கிறார் ராகுல்

34


ADDED : டிச 19, 2024 03:59 PM

Google News

ADDED : டிச 19, 2024 03:59 PM

34


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: '' அம்பேத்கர் குறித்த பேச்சுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், '' என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டு விழா விவாதத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி கடந்த இரு தினங்களாக இரு அவைகளையும் எதிர்க்கட்சியினர் முற்றுகையிட்டு வருகின்றனர். அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பார்லிமென்ட் வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில் போராட்டம் நடந்தது. இவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.பி.,க்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இரண்டு எம்.பி.,க்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரித்து உள்ளார்.

இந்நிலையில் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அம்பேத்கருக்கு எதிரான அமித்ஷாவின் கருத்தை நாட்டு மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். மறக்க மாட்டார்கள். இதற்காக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

பிரியங்கா வலியுறுத்தல்

வயநாடு தொகுதி எம்.பி., பிரியங்கா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாட்டின் அரசியல்சாசனத்தை கொடுத்தவரும், ஒவ்வொரு மக்களுக்கும் உரிமைகளை அளித்தவரும்,கோடிக்கணக்கான தலித்களின் வாழ்க்கையை மாற்றியவருமான அம்பேத்கரை பா.ஜ. தொடர்ந்து அவமதித்து வருகிறது. இதன் மூலம், தலித்கள், நாட்டின் பின் தங்கிய மக்களை அவமதித்து வருகிறது. இதற்காக பா.ஜ., மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

மற்றொரு அறிக்கையில், பார்லிமென்டிற்கு பா.ஜ., குச்சிகளுடன் வரும்.எங்களை பார்லிமென்டிற்குள் நுழைவதை தடுக்க வேண்டும் என எண்ணுகிறது. ஆனால், அம்பேத்கர் அவமதிக்கப்பட்டது முக்கியமான விஷயம். இதற்காக பா.ஜ., மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us