sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆந்திர முதல்வரின் சகோதரி காங்கிரசில் ஐக்கியம்

/

ஆந்திர முதல்வரின் சகோதரி காங்கிரசில் ஐக்கியம்

ஆந்திர முதல்வரின் சகோதரி காங்கிரசில் ஐக்கியம்

ஆந்திர முதல்வரின் சகோதரி காங்கிரசில் ஐக்கியம்


ADDED : ஜன 05, 2024 01:17 AM

Google News

ADDED : ஜன 05, 2024 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர்., தெலுங்கானா தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா நேற்று காங்கிரசில் இணைந்தார்.

ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர்., தெலுங்கானா என்ற கட்சியை நடத்தி வந்தார்.

இவர் தன் கட்சியை காங்கிரசில் இணைக்க இருப்பதாக கடந்த சில மாதங்களாக பேச்சு அடிபட்டு வந்தது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் நடந்து முடிந்த தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தன் ஆதரவை ஷர்மிளா வழங்கினார்.

இந்நிலையில், நேற்று புதுடில்லி சென்ற அவர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அக்கட்சி எம்.பி., ராகுல் ஆகியோர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்.

தன் கட்சியையும், காங்கிரசுடன் இணைப்பதாக அறிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

காங்கிரஸ் நாட்டின் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சி; அது எப்போதும் நாட்டின் உண்மையான கலாசாரத்தை நிலைநிறுத்தி, தேசத்தின் அடித்தளத்தை கட்டியெழுப்புகிறது.

இனி, அக்கட்சியின் ஒரு பகுதியாக ஒய்.எஸ்.ஆர்., தெலுங்கானா இருக்கப் போவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

ராகுலை, நம் நாட்டின் பிரதமராக பார்க்க வேண்டும் என்பது என் தந்தையின் கனவாக இருந்தது; அதைச் செய்வதில் நான் ஒரு அங்கமாக இருக்கப் போகிறேன் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சிஅடைகிறேன்.

எந்த பொறுப்பு வழங்கப்பட்டாலும் அதை நிறைவேற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தெலுங்கானா முதல்வரான ரேவந்த் ரெட்டி, தற்போது அம்மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார்.

விரைவில் ஷர்மிளா தெலுங்கானா காங்., தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.






      Dinamalar
      Follow us