sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வாகனங்களில் ரேஷன் சப்ளை: ரத்து செய்தது ஆந்திர அரசு

/

வாகனங்களில் ரேஷன் சப்ளை: ரத்து செய்தது ஆந்திர அரசு

வாகனங்களில் ரேஷன் சப்ளை: ரத்து செய்தது ஆந்திர அரசு

வாகனங்களில் ரேஷன் சப்ளை: ரத்து செய்தது ஆந்திர அரசு


ADDED : ஜூன் 02, 2025 01:34 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயவாடா: ஆந்திராவில், வாகனங்களில் ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யும் திட்டத்தை, அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, 2019 - 2025 மே வரை ஆட்சியில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்., அரசு, வாகனங்களில் ரேஷன் பொருட்களை விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, இந்த திட்டத்தை ரத்து செய்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு உத்தரவிட்டது.

இது குறித்து, ஜனசேனாவைச் சேர்ந்த ஆந்திர பொது வினியோகத் துறை அமைச்சர் என்.மனோகர் கூறியதாவது:

வாகனங்களில் ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. இனி, எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை மக்கள் வாங்கிக் கொள்ளலாம்.

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்; அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரத்தில் அனைத்து நாட்களும் ரேஷன் கடைகள் இயங்கும்.

ஜெகன் மோகன் ரெட்டியின் முந்தைய அரசு, வீட்டு ரேஷன் வினியோகம் என்ற பெயரில், 17,000 கோடி ரூபாய் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தி உள்ளது. இத்திட்டத்தால் அரசுக்கு, 385 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us