sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திருப்பதியில் கூட்ட நெரிசலில் 6 பேர் பலி; மன்னிப்பு கோரியது திருப்பதி தேவஸ்தானம்; நிவாரணம் அறிவிப்பு

/

திருப்பதியில் கூட்ட நெரிசலில் 6 பேர் பலி; மன்னிப்பு கோரியது திருப்பதி தேவஸ்தானம்; நிவாரணம் அறிவிப்பு

திருப்பதியில் கூட்ட நெரிசலில் 6 பேர் பலி; மன்னிப்பு கோரியது திருப்பதி தேவஸ்தானம்; நிவாரணம் அறிவிப்பு

திருப்பதியில் கூட்ட நெரிசலில் 6 பேர் பலி; மன்னிப்பு கோரியது திருப்பதி தேவஸ்தானம்; நிவாரணம் அறிவிப்பு

41


UPDATED : ஜன 09, 2025 12:24 PM

ADDED : ஜன 09, 2025 07:16 AM

Google News

UPDATED : ஜன 09, 2025 12:24 PM ADDED : ஜன 09, 2025 07:16 AM

41


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பதி: திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியான சம்பவத்திற்கு தேவஸ்தானம் மன்னிப்பு கோரியது. உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்து உள்ளது.



ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்புடன் வைகுண்ட ஏகாதசி தரிசனம் துவங்குகிறது. வரும் 19ம் தேதி வரை வைகுண்ட துவாரம், பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் வாங்க நின்றிருந்த பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, சேலத்தைச் சேர்ந்த மல்லிகா, பொள்ளாச்சியை சேர்ந்த நிர்மலா உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.

மன்னித்துவிடுங்க!

இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி, 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் மன்னிப்பு கோரியது. இது குறித்து, திருப்பதி தேவஸ்தானம் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் கூறியதாவது: கூட்ட நெரிசல் துரதிர்ஷ்டவசமானது. இந்த சம்பவம் தொடர்பாக பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சில குறைபாடுகள் உள்ளன. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இழந்த உயிர்களை மீட்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

கடும் நடவடிக்கை

திருப்பதி எம்.ஜி.எம்., கவுன்டரின் மெயின் கேட்டை முன்னறிவிப்பின்றி திறந்து விட்டதே கூட்ட நெரிசல் ஏற்பட்ட காரணம்; இந்த விஷயத்தில் அலட்சியமாகச் செயல்பட்ட டி.எஸ்.பி., மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வெங்கடேஷ்வர் தெரிவித்தார். உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்து உள்ளது.

நேரில் செல்கிறார் சந்திரபாபு

கூட்ட நெரிசலில் சிக்கி, காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தர்களை இன்று (ஜன.,09) முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று நலம் விசாரிக்க உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த செய்தி வேதனை அளிக்கிறது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us