ஆக., 16ம் தேதி முதல் மீண்டும் உண்ணாவிதரம் : அன்னா ஹசாரே
ஆக., 16ம் தேதி முதல் மீண்டும் உண்ணாவிதரம் : அன்னா ஹசாரே
UPDATED : ஜூலை 28, 2011 05:40 PM
ADDED : ஜூலை 28, 2011 04:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பிரதமர், நீதிபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களை லோக்பால் மசோதா வரம்பிற்குள் கொண்டு வராமலேயே, மத்திய அரசு லோக்பால் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்த மசாதோ பெருத்த ஏமாற்றம் அளிப்பதாகவும், நாட்டிற்கு இந்த அரசு பெரும் துரோகம் செய்து விட்டதாகவும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் டில்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும், இந்த உண்ணாவிரதத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

