ADDED : செப் 28, 2024 12:49 AM
சென்னை, ஜோயாலுக்காஸ் ஜுவல்லரியில், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில், 'செயின் பெஸ்ட்' என்ற தலைப்பில், 'பிளாட் - 4.99' சதவீத சேதாரம் மற்றும் செய்கூலி சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சலுகையால், வாடிக்கையாளர்கள் உயர்ந்த தரத்திலான ஜுவல்லரிகளை வாங்குவதற்காக, தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
இச்சலுகை, வரும் 6ம் தேதி வரை உள்ளது. 'செயின் பெஸ்ட்' சலுகையை, ஜோயாலுக்காஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜோய் ஆலுக்காஸ் அறிமுகப்படுத்தினார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''தரத்தில் எவ்வித சமரசமும் செய்யாமல், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்குவது தான் ஜோயாலுக்காஸின் இலக்கு. இச்சலுகை வாயிலாக, கைவினை கலையில் வடிவமைக்கப்பட்ட செயின்களை, இதுவரை இல்லாத 4.99 சதவீதத்தில் சேதாரம் மற்றும் செய்கூலியில் வழங்குகிறோம்.
அனைவரும் நகைகளை வாங்கும் வகையில் இச்சலுகையை அளிக்கிறோம்,'' என்றார்.