sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தலித் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ஒத்திவைப்பதாக அறிவிப்பு

/

தலித் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ஒத்திவைப்பதாக அறிவிப்பு

தலித் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ஒத்திவைப்பதாக அறிவிப்பு

தலித் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ஒத்திவைப்பதாக அறிவிப்பு

1


ADDED : ஜன 09, 2025 06:41 AM

Google News

ADDED : ஜன 09, 2025 06:41 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: நேற்று நடப்பதாக இருந்த எஸ்.சி., - எஸ்.டி., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் எஸ்.சி., - எஸ்.டி., எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் கூட்டம் நடப்பதாகவும், இதற்கு கட்சித் தலைமை அனுமதி அளித்துள்ளதாகவும், நேற்று முன்தினம் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்திருந்தார். திடீரென இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக பெங்களூரில் நேற்று பரமேஸ்வர் அளித்த பேட்டி:

சித்ரதுர்காவில் நடந்த எஸ்.சி., - எஸ்.டி., மாநாட்டில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. இவ்விஷயம், கட்சித் தலைமைக்கு தெரியவில்லை. தற்போது மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்துவது தொடர்பாக மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையறிந்த மாநில பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, தானும் இக்கூட்டத்தில் பங்கேற்க விரும்புவதாக தெரிவித்தார். அத்துடன், 'இன்றைய (நேற்று) தினம் வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால், வர இயலவில்லை' என்றார். எனவே தான் இந்த கூட்டம் ரத்து செய்யப்படவில்லை; ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தும்போது, டின்னர் வைப்பது சகஜம். இக்கூட்டம் நடத்தவது அவர்களுக்கு பிடித்துள்ளதா, இல்லையா என்பதை சில நாட்கள் பொறுத்திருந்து பார்க்கலாம். கூட்டத்துக்கு அனுமதிக்கவில்லை என்று யாரும் கூறவில்லை. ஒத்திவைத்துள்ளோம், அவ்வளவு தான்.

இக்கூட்டம் தொடர்பாக, கட்சி மேலிடத்தில் துணை முதல்வர் சிவகுமார் புகார் அளித்தாரா என்று தெரியவில்லை. அவரையும் எங்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பது தொடர்பாக விவாதித்தோம். அரசியல் செய்ய வேண்டுமென்றால், நேரடியாக, பகிரங்கமாக செய்வோம். இதில் ரகசியம் எதுவும் இல்லை.

தலித் சமுதாயத்தினர் மீது தொடர்ந்து நடக்கும் தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும். மீண்டும் ஆலோசனை கூட்டம் தொடர்பாக தேதி நிர்ணயித்த பின், உங்களுக்கு தெரிவிக்கப்படும். என்ன நடந்தது என்று அனைத்தையும் கூற இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னணியில் சதி: ராஜண்ணா புகார்

கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா, துமகூரில் நேற்று அளித்த பேட்டி:எஸ்.சி., - எஸ்.டி., சமூக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை சரியாக கிடைப்பதில்லை. விடுதிகளிலும் சரியான அறை வசதி இல்லை. மாணவர்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து விவாதிக்க உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் இரவு விருந்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.விருந்து தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ஒருவர் உள்ளார். நாங்கள் சந்திக்கக் கூடாது என்று சதி செய்யும் அவர், எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்திற்கு எதிரானவரா? அவரது முயற்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்காது.அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி வீட்டில் சில தினங்களுக்கு முன்பு நடந்த கூட்டதால் கட்சியில் குழப்பம் ஏற்பட்டது. மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதால், இரவு விருந்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். ரத்து செய்யவில்லை.வரும் 13ம் தேதி சாம்ராஜ் நகரில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. அந்தக் கூட்டம் நடப்பதற்கு முன்போ அல்லது பின்போ எஸ்.சி., - எஸ்.டி., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தலித் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னணியில், துணை முதல்வர் சிவகுமார் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான், அவரது பெயரை குறிப்பிடாமல் அமைச்சர் ராஜண்ணா விமர்சித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.








      Dinamalar
      Follow us