sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இஸ்ரோவின் இன்னொரு சாதனை; மொபைல் போனில் வழிகாட்டுதல் சேவை வழங்க மெகா திட்டம்

/

இஸ்ரோவின் இன்னொரு சாதனை; மொபைல் போனில் வழிகாட்டுதல் சேவை வழங்க மெகா திட்டம்

இஸ்ரோவின் இன்னொரு சாதனை; மொபைல் போனில் வழிகாட்டுதல் சேவை வழங்க மெகா திட்டம்

இஸ்ரோவின் இன்னொரு சாதனை; மொபைல் போனில் வழிகாட்டுதல் சேவை வழங்க மெகா திட்டம்

2


ADDED : நவ 10, 2024 10:41 AM

Google News

ADDED : நவ 10, 2024 10:41 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: செயற்கைக்கோள்களை ஏவி, பொதுமக்களின் மொபைல் போன் மூலம் வழிகாட்டுதல் சேவை வழங்க இஸ்ரோ மெகா திட்டமிட்டுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் முன் எப்போதும் இல்லாத புதிய பாய்ச்சல்களை இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம் நிகழ்த்தி வருகிறது. சமீபத்தில் சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 உள்ளிட்ட திட்டங்களை இஸ்ரோ சிறப்பாக செய்தது. இதனால் இஸ்ரோவுக்கு மக்கள் மத்தியில் புகழ் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த சூழலில், 7 செயற்கைக் கோள்களை ஏவி, பொதுமக்களின் மொபைல் போனுக்கு நேவிகேஷன் எனப்படும் வழிகாட்டுதல் சேவை வழங்க இஸ்ரோ மெகா திட்டமிட்டுள்ளது.



இது குறித்து விண்வெளித்துறையின் 'இன்ஸ்பேஸ்' தலைவர் பவன் கோயங்கா கூறியதாவது: எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது பற்றிய தகவல் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில், நேவிகேஷன் அமைப்பை உருவாக்க இஸ்ரோ பணியாற்றி வருகிறது. நாங்கள் 7 நேவிகேஷன் செயற்கைக்கோள்களை அறிமுகப்படுத்த உள்ளோம். உலக அளவில் சிறு செயற்கைக்கோள் சந்தை 5.2 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளது. இதில் பெரும் பங்கை கைப்பற்ற இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இதற்காக, இஸ்ரோவின் சிறிய ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் குலசேகரப்பட்டினம் விண்வெளி தளத்தில் இருந்து இந்த சிறிய ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்கள் ஏவப்படும். விண்வெளித்துறையில் இளைஞர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதோடு திறமைசாலிகளின் தேவையும் அதிகரித்து வருகிறது. எனவே விண்வெளித்துறையில் முழுநேரப் பட்டப்படிப்பைகொண்டுவர பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இன்ஸ்பேஸ் மையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us