sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு...: 25,000 காலி பணியிடங்கள் நிரப்ப முடிவு!

/

ரயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு...: 25,000 காலி பணியிடங்கள் நிரப்ப முடிவு!

ரயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு...: 25,000 காலி பணியிடங்கள் நிரப்ப முடிவு!

ரயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு...: 25,000 காலி பணியிடங்கள் நிரப்ப முடிவு!

7


ADDED : அக் 19, 2024 06:32 PM

Google News

ADDED : அக் 19, 2024 06:32 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ரயில்வே துறையில் பணியாளர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, ஓய்வு பெற்ற பணியாளர்களைக் கொண்டு 25,000 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரயில்வேதுறையில், ஓய்வு பெற்ற பணியாளர்களை பணியமர்த்த, முடிவு செய்துள்ளதாக, இரண்டு நாட்களுக்கு முன் ரயில்வே வாரியம் அறிவித்தது. இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனை தொடர்ந்து, தற்போது 25 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை இன்று தொடங்கிவிட்டது.

இது குறித்து ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளதாவது:

முதற்கட்டமாக, சூப்பரவைசர் முதல் டிராக்மேன் வரை நிரப்ப முடிவு செய்துள்ளோம்.

65 வயதுக்கு உட்பட்ட, ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள், இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் 2 ஆண்டுகளுக்கு பணியமர்த்தப்படுவர். சாத்திய கூறுகள் இருந்தால் அதற்கு மேலும் வாய்ப்பு அளிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் அனைத்து மண்டல ரயில்வேயின் பொது மேலாளர்களுக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்து மருத்துவ தகுதி மற்றும் செயல்திறன் மதிப்பீடுகள் போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் ஓய்வுபெற்ற ஊழியர்களை பணியமர்த்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு, அவர் கடைசியாக மாத வருமானம் என்ன வாங்கினாரோ அதற்கு சமமான தொகை வழங்கப்படும். ஆனால் அடிப்படை சம்பளம் கழிக்கப்படும். டி.ஏ., உண்டு. மற்ற கூடுதல் சலுகைகள், ஊதிய உயர்வு கிடைக்காது.

பணியமர்த்தப்படும் பணியாளர்கள், கடந்த 5 ஆண்டுகளில் நன்மதிப்பு பெற்றவராக இருக்க வேண்டும். அவர்கள் மீது எந்த குற்றநடவடிக்கை வழக்குகள் இருக்க கூடாது.

வடக்கு-மேற்கு ரயில்வே மண்டலத்தில் மட்டும் 10 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

இவ்வாறு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us