sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாபா சித்திக் கொலை போல மற்றொரு சம்பவம்; ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய திரிணமுல் கவுன்சிலர்...

/

பாபா சித்திக் கொலை போல மற்றொரு சம்பவம்; ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய திரிணமுல் கவுன்சிலர்...

பாபா சித்திக் கொலை போல மற்றொரு சம்பவம்; ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய திரிணமுல் கவுன்சிலர்...

பாபா சித்திக் கொலை போல மற்றொரு சம்பவம்; ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய திரிணமுல் கவுன்சிலர்...

8


UPDATED : நவ 16, 2024 03:28 PM

ADDED : நவ 16, 2024 03:25 PM

Google News

UPDATED : நவ 16, 2024 03:28 PM ADDED : நவ 16, 2024 03:25 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் திரிணமுல் காங்கிரஸ் கவுன்சிலரை துப்பாக்கியால் சுட முயன்ற சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கொலை சம்பவத்தைப் போலவே மேற்கு வங்கத்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறியிருப்பது அரசியல் பிரமுகர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கோல்கட்டா மாநகராட்சியின் 108வது வார்டு திரிணமுல் காங்கிரஸ் கட்சி கவுன்சிலராக இருப்பவர் சுஷந்தா கோஷ். இவர் தனது வீட்டின் முன்பக்கம் அமர்ந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, ஸ்கூட்டரில் வந்த 2 பேரில் ஒருவன், திடீரென இறங்கி வந்து, துப்பாக்கியால் சுஷாந்தா கோஷை சுட முயன்றான். ஆனால், துப்பாக்கி திடீரென கோளாறு ஆனதால், புல்லட் வெளியே வரவில்லை. இதனால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார்.

பின்னர், அங்கிருந்து தப்பியோட முயன்ற அந்த இளைஞரை சுஷாந்தா கோஷ் மடக்கி பிடித்து, தாக்கினார். உடனே, அங்கு பொதுமக்கள் கூடினர்.

தன்னை கொல்ல யார் அனுப்பி வைத்தது என்று கேட்டு அந்த நபரை தொடர்ந்து தாக்கினார். இதையடுத்து, அந்த நபரை போலீஸில் ஒப்படைத்தனர். இது தொடர்பான சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us