sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இஸ்ரோவுக்கு இன்னொரு வெற்றி: விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி., - டி3 ராக்கெட்

/

இஸ்ரோவுக்கு இன்னொரு வெற்றி: விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி., - டி3 ராக்கெட்

இஸ்ரோவுக்கு இன்னொரு வெற்றி: விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி., - டி3 ராக்கெட்

இஸ்ரோவுக்கு இன்னொரு வெற்றி: விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி., - டி3 ராக்கெட்

8


UPDATED : ஆக 16, 2024 12:28 PM

ADDED : ஆக 16, 2024 09:18 AM

Google News

UPDATED : ஆக 16, 2024 12:28 PM ADDED : ஆக 16, 2024 09:18 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, புவியை கண்காணிக்கும், 'இ.ஓ.எஸ்., - 08' செயற்கைக்கோளை சுமந்தபடி, 'எஸ்.எஸ்.எல்.வி., - டி3' ராக்கெட் இன்று (ஆகஸ்ட் 16) காலை, 9:17 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இ.ஒ.எஸ்., செயற்கைக் கோள் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. எடை குறைந்த செயற்கைக்கோளை செலுத்த, எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Image 1308552இந்நிலையில், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மைய ஏவுதளத்தில் இருந்து, இன்று காலை, 9:17 மணிக்கு, இ.ஓ.எஸ்., - 08 செயற்கைக்கோளை சுமந்தபடி, எஸ்.எஸ்.எல்.வி., - டி3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. பூமியில் இருந்து, 475 கி.மீ., உயரம் உள்ள சுற்று வட்ட பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

சிறப்பு அம்சங்கள்

* புவி கண்காணிப்பு செயல்பாட்டிற்காக, 'இ.ஓ.எஸ்., - 08' செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதன் எடை 175.50 கிலோ.

Image 1308553* ஓராண்டு ஆயுள் காலம் உடைய அதில், 'எலக்ட்ரோ ஆப்டிக்கல் இன்ப்ராரெட் பேலோட், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் - ரெப்லெக்டோமெட்ரி பேலோட், சிக் யுவி டோசிமீட்டர்' ஆகிய ஆய்வுக் கருவிகள் உள்ளன.

* விண்கலத்தில் இடம் ற்றுள்ள ஜி.என்.எஸ். எஸ்.ஆர் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகள் கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும்.

* எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வுகளை இந்த கருவிகள் மேற்கொள்ள உள்ளன.

* இ.ஒ.எஸ்., செயற்கைக் கோள் பேரிடர் காலங்களில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது.

* இரவிலும் மிகத் துல்லியாக புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டது.

* ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்வோரை கண்காணிக்கும் பணியிலும் இ.ஒ.எஸ்,., செயற்கைக் கோள் ஈடுபட உள்ளது. மிக துல்லியமான மற்றும் அத நவீன கருவிகள் உள்ளிட்டவை செயற்கைக் கோளில் உள்ளன.Image 1308554

திட்டம் 100% வெற்றி

இஸ்ரோ தலைவர் சோம்நாத் அளித்த பேட்டி: புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்கான இ.ஒ.எஸ்., செயற்கைக் கோள் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இது மிகவும் வெற்றிகரமான பணி.
இந்த திட்டம் 100% வெற்றியடைந்துள்ளது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ராக்கெட் திட்டமிட்டபடி, செயற்கைக் கோளை துல்லியமான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us