sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'அமெரிக்க அரசின் ஆலோசகர்களாக பயங்கரவாதிகளை நியமனம் செய்வதா?'

/

'அமெரிக்க அரசின் ஆலோசகர்களாக பயங்கரவாதிகளை நியமனம் செய்வதா?'

'அமெரிக்க அரசின் ஆலோசகர்களாக பயங்கரவாதிகளை நியமனம் செய்வதா?'

'அமெரிக்க அரசின் ஆலோசகர்களாக பயங்கரவாதிகளை நியமனம் செய்வதா?'


ADDED : மே 18, 2025 11:51 PM

Google News

ADDED : மே 18, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசின் ஆலோசகர்களாக பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அமெரிக்காவில், அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசின் நடவடிக்கைகளுக்கு, வெள்ளை மாளிகையின் ஆலோசனை குழுவில் உள்ள நபர்கள், ஆலோசனைகள் வழங்குவர்.

சமீபத்தில் இஸ்மாயில் ராயர், ஷேக் ஹம்சா யூசுப் ஆகிய இருவர் இந்த குழுவுக்கான புதிய ஆலோசகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரும், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என, அந்நாட்டின் புலனாய்வு செய்தியாளர் லாரா லுாமர் என்பவர் கட்டுரை எழுதியுள்ளார்.

கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ள தாவது:

இஸ்மாயில் ராயர், லஷ்கர் - இ - தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்.

இவர், கடந்த 2000ம் ஆண்டில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களில் பயிற்சி பெற்று, பல்வேறு பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டுள்ளார். கடந்த, 2008ல் மும்பை தாக்குதல் சம்பவங்களில் இவருக்கு தொடர்புள்ளது.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் ஈடுபட்ட 'விர்ஜினியா ஜிஹாதி குழு'வின் முக்கிய நபராக ராயர் இருந்ததுடன், லஷ்கர் - இ - தொய்பா, அல் - குவைதா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பினருக்கு ஆயுத பயிற்சியும் அளித்துள்ளார்.

இதேபோல் கலிபோர்னியாவின் ஸைதுனா கல்லுாரியின் இணை நிறுவனர் ஷேக் ஹம்சா யூசுப், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர். இந்தியாவின் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பால் குற்றஞ்சாட்டப்பட்டவர்.

இவரிடமும், இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம் தொடர்பாக எப்.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுதவிர, அமெரிக்காவுக்கு எதிரான செயல்பாடுகளிலும் யூசுப் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

இவ்வாறு இதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இருவரும் வெள்ளை மாளிகையின் ஆலோசனைக்குழுவில் இடம்பிடித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us