ஆம்புலன்ஸ் வராததால் தந்தையின் உடலை ‛பைக்'கில் கொண்டு சென்ற மகன்கள்
ஆம்புலன்ஸ் வராததால் தந்தையின் உடலை ‛பைக்'கில் கொண்டு சென்ற மகன்கள்
ADDED : செப் 20, 2024 12:15 AM

பெங்களூரு: அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 80 வயது தந்தை உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராததால், மகன்கள் பைக்கில் கொண்டு சென்ற சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் தும்குர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் 80 வயது கொடுகுல்லா ஹனுரப்பா என்பவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து 5 கி.மீ.தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்த தந்தையின் உடலை மீண்டும் கிராமத்திற்கு எடுத்துச் செல்ல அரசு மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தந்தையின் உடலை அவரது மகன்களான இருவரும் இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றனர்.
இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மருத்துவ அதிகாரி கூறுகையில், வேறு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டது. காத்திருக்க நேரமில்லாமல் உடலை பைக்கில் எடுத்துச்சென்றுவிட்டனர் என்றார்.
************