ADDED : ஜன 03, 2024 08:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷியோபுர்: மத்திய பிரதேசத்தில் குனோ தேசிய பூங்காவில் ஆஷா பெண் சிவிங்கிப்புலி மூன்று குட்டிகளை ஈன்ற சம்பவம் நடந்துள்ளது.
ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஐந்து பெண் சிவிங்கிப்புலிகள் உட்பட எட்டு சிவிங்கிப்புலிகளை, ம.பி., மாநிலம் ஷியோபுர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில், கடந்த ஆண்டு செப்., 17ல், பிரதமர் மோடி திறந்து விட்டார்.
இந்நிலையில் ஆஷா என்ற பெண்சிவிங்கிப்புலி மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. அதன் புகைபடங்கள், வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.