sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி சட்டசபை கலைப்பு: கவர்னர் உத்தரவு

/

டில்லி சட்டசபை கலைப்பு: கவர்னர் உத்தரவு

டில்லி சட்டசபை கலைப்பு: கவர்னர் உத்தரவு

டில்லி சட்டசபை கலைப்பு: கவர்னர் உத்தரவு

5


UPDATED : பிப் 09, 2025 12:06 PM

ADDED : பிப் 09, 2025 11:25 AM

Google News

UPDATED : பிப் 09, 2025 12:06 PM ADDED : பிப் 09, 2025 11:25 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து அதிஷி விலகினார். ராஜினாமா கடிதத்தை அவர் கவர்னர் சக்சேனாவிடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சட்டசபையை கலைத்து கவர்னர் உத்தரவிட்டு உள்ளார்.

டில்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆட்சி பறிபோனதால், ஆம் ஆத்மி கட்சியினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதனையடுத்து, டில்லி முதல்வராக இருக்கும் அதிஷி, கவர்னர் சக்சேனாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர், முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பதவி விலகலை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.

உத்தரவு

இதனைத் தொடர்ந்து டில்லி சட்டசபையை உடனடியாக கலைத்து கவர்னர் சக்சேனா உத்தரவிட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us