ADDED : பிப் 17, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிற்படுத்தப்பட்டோர் நலன்
l பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கட்டுப்பாட்டில் வரும் 174 மொரார்ஜி தேசாய் பள்ளிகள், கல்லுாரிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
l பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள் தங்கி படிப்பதற்காக, புதிதாக 30 விடுதிகள் கட்டப்படும்.
l பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் ஆசிரம பள்ளிகளின் பெயர், 'தேவராஜ் அர்ஸ் பள்ளி' என்று பெயர் மாற்றம் செய்யப்படும்.
l பொதுசட்ட நுழைவு, மேலாண்மை திறன் தேர்வுகளுக்கு, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களை தயார்படுத்த, இலவச பயிற்சி அளிக்கப்படும்.
l நாடோடிகள் நலனுக்காக ஆணையம் அமைக்கப்படும்.
மேற்கண்ட திட்டங்கள் உட்பட பல திட்டங்களை செயல்படுத்த, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு 1,600 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.