ADDED : ஆக 19, 2025 03:17 PM

மும்பை: ஆசிய கோப்பை 'டி-20' தொடரில், சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை 'டி-20' தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (செப். 9-28) நடக்க உள்ளது. இதில் விளையாடுவதற்கு வீரர்களை தேர்வு செய்யும் கூட்டம் பயிற்சியாளர் காம்பிர், தேர்வுக்குழு தலைவர் அகார்கர் தலைமையில் நடந்தது.
இதன் முடிவில் தேர்வு செய்யப்பட்ட சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பெயர் பின்வருமாறு:
1. சூர்ய குமார் (கேப்டன்)
2. சுப்மன் கில் ( துணை கேப்டன்),
3.அபிஷேக் ஷர்மா,
4. திலக் வர்மா,
5. ஹர்திக் பாண்ட்யா,
6. ஷிவம் தூபே,
7. அக்சர் படேல்,
8. ஜித்தேஷ் ஷர்மா,
9. பும்ரா,
10. அர்ஷ்தீப் சிங்,
11. வருண் சக்கரவர்த்தி,
12. குல்தீப் யாதவ்,
13. சஞ்சு சாம்சன்,
14. ஹர்ஷித் ராணா,
15. ரிங்கு சிங்