sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் மோடி - ஜெய்சங்கர் ஆலோசனை

/

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் மோடி - ஜெய்சங்கர் ஆலோசனை

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் மோடி - ஜெய்சங்கர் ஆலோசனை

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் மோடி - ஜெய்சங்கர் ஆலோசனை

12


ADDED : நவ 29, 2024 02:47 AM

Google News

ADDED : நவ 29, 2024 02:47 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி,நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார்.

வங்கதேசத்தில் உள்ள, 'சம்மிலிதா சனாதனி ஜோதே' என்ற ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. இவர், 'இஸ்கான்' எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி.

கடந்த மாதம் 30ம் தேதி ஹிந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தின் போது, வங்கதேச தேசிய கொடியை அவமதித்ததாக கிருஷ்ண தாைஸ சமீபத்தில் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.

தேச துரோகம் உட்பட 18 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சிட்டங்காங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரை போலீசார் அழைத்து வந்தபோது, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து, போராட்டக்காரர்களை கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.

இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இஸ்கான் மற்றும் ராமகிருஷ்ண இயக்கம் ஆகியவை மத்திய அரசை வலியுறுத்தியது.

பார்லிமென்டின் நடப்பு கூட்டத்தொடரிலும் இந்த பிரச்னை எதிரொலித்தது.

காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் உட்பட பல்வேறு தரப்பினர் இந்த பிரச்னை குறித்து கேள்வி எழுப்பிய போது, 'வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு அந்நாட்டு அரசுக்கு, மத்திய அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற தாக்குதல்கள் மனிதகுலத்துக்கு எதிரான செயல். இந்த விவகாரத்தில் ஐ.நா., சபையின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது,” என மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தெரிவித்தார்.

இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடியை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்து பிரதமரிடன் அவர் விரிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

தடை இல்லை

இஸ்கான் அமைப்பை தடை செய்யக் கோரி வங்கதேச உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நேற்று மீண்டும் விசாரணை நடந்தது.அப்போது, இஸ்கான் அமைப்பு மீது அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.கிருஷ்ணதாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்தபோது நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்தும், இந்த விவகாரத்தில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, இஸ்கான் அமைப்புக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. வங்கதேசத்தில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளை அரசு பாதுகாக்கும் என நம்புவதாக நீதிமன்றம் தெரிவித்தது.



இஸ்கான் குற்றச்சாட்டு

வங்கதேசத்தில் செயல்படும் இஸ்கான் அமைப்பின் தலைவர் சாரு சந்திர தாஸ் பிரம்மசாரி கூறியதாவது:வங்கதேசத்தில் ஹிந்து சமூகத்திற்கு பாதுகாப்பாக இஸ்கான் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதை சீர்குலைக்கும் வகையில் அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இங்கு நிகழும் கட்டாய மதமாற்ற சம்பவங்களை எதிர்த்து நடவடிக்கை எடுத்து வருவதால், இஸ்கான் அமைப்பு மீது பொய்யான குற்றச்சாட்டுகள் எடுத்துரைக்கப்படுகின்றன. நாங்கள் அமைதியான அமைப்பாக இருப்பதால் தான், எங்கள் அமைப்பை தடை செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.நாங்கள் எப்போதும் மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்காக உழைத்து வருகிறோம். எங்கள் போதனைகள் வாயிலாக ஹிந்துக்களை ஒன்றிணைக்கிறோம். எங்கள் உறுப்பினராக இல்லாத ஒருவருக்காக சுமத்தப்படும் வீண்பழிகளை ஏற்றுக் கொள்ள முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.



தாக்குதலுக்கு ஹசீனா கண்டனம்

கிருஷ்ணதாஸ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது அவாமி லீக் கட்சியின் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வங்கதேச இடைக்கால அரசு, சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்டது. சனாதன சமூகத்தின் உயர்மட்ட தலைவர் அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். மத சுதந்திரம் மற்றும் அனைத்து சமூக மக்களின் வாழ்க்கை மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை தற்போதைய அரசு உறுதி செய்ய வேண்டும். நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த போராட்டத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் எல்லாத் துறைகளிலும் தோல்வியடைந்துள்ளனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியதுடன் மனித உயிருக்குப் பாதுகாப்பு வழங்கவும் தவறிவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us