sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழக சுற்றுலா பயணிகளை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது: 10 நாட்கள் இடைவெளியில் அரங்கேறிய மூன்றாவது சம்பவம்

/

தமிழக சுற்றுலா பயணிகளை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது: 10 நாட்கள் இடைவெளியில் அரங்கேறிய மூன்றாவது சம்பவம்

தமிழக சுற்றுலா பயணிகளை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது: 10 நாட்கள் இடைவெளியில் அரங்கேறிய மூன்றாவது சம்பவம்

தமிழக சுற்றுலா பயணிகளை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது: 10 நாட்கள் இடைவெளியில் அரங்கேறிய மூன்றாவது சம்பவம்


ADDED : நவ 10, 2025 12:51 AM

Google News

ADDED : நவ 10, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறில் தமிழக சுற்றுலாப் பயணிகள் மீது மது போதையில் தாக்குதல் நடத்திய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அரவிந்தராஜ். இவர் தனது குடும்பத்தினருடன் காரில் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் நேற்று மதியம் நகரில் ஜி.எச்., ரோட்டில் சென்ற போது எதிரில் வந்த ஆட்டோ, காரில் உரசியது. அதுகுறித்து அரவிந்த்ராஜ் கேட்டபோது, மது போதையில் இருந்த ஆட்டோ டிரைவர் அரவிந்த்ராஜையும், குடும்பத்தினரையும் தாக்கினார்.

சுற்றுலாப் பயணிகள் அளித்த தகவலின்படி மூணாறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆட்டோ டிரைவரை பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மூணாறு அருகே மாட்டுபட்டி எஸ்டேட் கொரண்டிக்காடு டிவிஷனைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேந்திரன் 29, அடிமாலியில் வசிப்பதாக தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.

அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மூணாறுக்கு அக்.30ல் சுற்றுலா வந்த மும்பை சுற்றுலாப் பயணி ஜான்வியிடம் உள்ளூர் டாக்சி டிரைவர்கள் மோசமான முறையில் நடந்து கொண்டனர். மூன்று டாக்சி டிரைவர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதேபோல் மூணாறு அருகே லெட்சுமி எஸ்டேட் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் நவ.5ல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை மிரட்டியதுடன், ஓட்டல் ஊழியரை தாக்கிய சம்பவத்தில், லெட்சுமி எஸ்டேட்டைச் சேர்ந்த ஜீப் டிரைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பட்டது.

இந்நிலையில் தற்போது 10 நாட்கள் இடை வெளியில் மூன்றாவது சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us