sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அயோத்தி ராமர் கோவில் தினமும் ஒரு மணி நேரம் அடைக்கப்படும்

/

அயோத்தி ராமர் கோவில் தினமும் ஒரு மணி நேரம் அடைக்கப்படும்

அயோத்தி ராமர் கோவில் தினமும் ஒரு மணி நேரம் அடைக்கப்படும்

அயோத்தி ராமர் கோவில் தினமும் ஒரு மணி நேரம் அடைக்கப்படும்


ADDED : பிப் 17, 2024 01:22 AM

Google News

ADDED : பிப் 17, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயோத்தி, பிப். 17-

அயோத்தி ராமர் கோவில், தினமும் நண்பகல் நேரத்தில் ஒரு மணி நேரம் அடைக்கப்படும் என, அக்கோவிலின் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டமைக்கப்பட்டு, கடந்த மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது.

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த கோவில் வளாகத்தில் மத்திய படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ராமர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை புரிகின்றனர். பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் வைத்து, தரிசன நேரத்தை காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, கோவில் நிர்வாகம் சமீபத்தில் அதிகரித்தது.

இதற்கிடையே, அயோத்தி ராமர் கோவில் தினமும் நண்பகல் 12:30 மணி முதல் 1:30 மணி வரை, ஒரு மணி நேரம் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கோவிலின் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறுகையில், ''அயோத்தி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குழந்தை ராமருக்கு, 5 வயது தான் ஆகிறது.

''எனவே, அவர் இளைப்பாறுவதற்காக சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. இதை கருத்தில் வைத்து, கோவில் நிர்வாகம் சார்பில் நண்பகலில் ஒரு மணி நேரம் அடைக்க உத்தரவிட்டுஉள்ளனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us