ADDED : மார் 11, 2024 11:22 PM

நாட்டில், எதிர்க்கட்சி தலைவர்களை அச்சுறுத்த, அமலாக்கத் துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை, மத்திய பா.ஜ., அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. 2014க்கு பின், பா.ஜ., நிர்வாகிகள் மீது இந்த அமைப்புகள் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
சரத் பவார், தலைவர், தேசியவாத காங்., - சரத் சந்திர பவார்
அனைத்துக்கும் முடிவு கட்டும்!
அரசியலமைப்பை திருத்தும் பா.ஜ.,வின் நோக்கம், ஒருபோதும் ரகசியமாக இருந்ததில்லை. அவர்களது திட்டப்படி, அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டால், அது பார்லி., ஜனநாயகம், கூட்டாட்சி, சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு ஆகியவற்றுக்கு முடிவு கட்டும்.
சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர், காங்கிரஸ்
கூட்டணி கதவுகள் மூடப்பட்டன!
மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரசுடன் கூட்டணி சேர்வதற்கான வாய்ப்பு, இன்னும் ஏதாவது இருக்கிறதா என, காங்கிரஸ் காத்திருப்பதாக தெரிகிறது. ஆனாலும் அதற்கான கதவுகள் மூடப்பட்டதாகவே நான் கருதுகிறேன்.
சீத்தாராம் யெச்சூரி, பொதுச்செயலர், மார்க்.கம்யூ.,

