sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபர்கள் ஜாமின் ரத்து

/

வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபர்கள் ஜாமின் ரத்து

வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபர்கள் ஜாமின் ரத்து

வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபர்கள் ஜாமின் ரத்து


ADDED : ஜன 25, 2024 01:30 AM

Google News

ADDED : ஜன 25, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, பிரபல தொழிலதிபர் கபில் வாத்வான், டி.எச்.எப்.எல். நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்தார். அவரது சகோதரர் தீரஜ் வாத்வான், அதன் இயக்குனராக இருந்தார்.

இந்த நிறுவனம், 17 வங்கிகளிடம் இருந்து, 42,871 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. அதில் முறைகேடு செய்யப்பட்டு, வாத்வான் சகோதரர்களின் பெயர்களில் முதலீடுகள் செய்யப்பட்டன.

மேலும், வங்கிக் கடனையும் முறையாக செலுத்தவில்லை. இவ்வாறு, 34,615 கோடி ரூபாய் மோசடி செய்ததாக இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கைதான இவர்களுக்கு, கடந்தாண்டு மே மாதத்தில் புதுடில்லி உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

இதை எதிர்த்து, சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களுடைய ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. உடனடியாக அவர்களை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு தாமதமானதாக பொய்யான தகவல் அளித்து இவர்கள் ஜாமின் பெற்றுஉள்ளனர். அதனால் ஜாமின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us