sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரன்யா குறித்து அவதுாறு செய்தி வெளியிட தடை

/

ரன்யா குறித்து அவதுாறு செய்தி வெளியிட தடை

ரன்யா குறித்து அவதுாறு செய்தி வெளியிட தடை

ரன்யா குறித்து அவதுாறு செய்தி வெளியிட தடை


ADDED : மார் 20, 2025 12:46 AM

Google News

ADDED : மார் 20, 2025 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : தங்கம் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ், அவரது தந்தை கூடுதல் டி.ஜி.பி., ராமசந்திர ராவ் குறித்து ஊடகங்களில் அவதுாறு செய்தி வெளியாவதை தடுங்கள் என்று மத்திய அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

துபாயில் இருந்து 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்திய வழக்கில், நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அவரது தந்தையான கூடுதல் டி.ஜி.பி., ராமசந்திர ராவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகின.

இதையடுத்து ரன்யா, ராமசந்திர ராவ் குறித்து ஊடகங்களில் அவதுாறு செய்தி வெளியாவதை தடுக்க உத்தரவிட கோரி, உயர்நீதிமன்றத்தில், ரன்யாவின் தாய் ரோகிணி மனு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவதுாறு செய்திகள் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுங்கள் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையில் தங்கம் கடத்திய வழக்கில் கைதான ரன்யாவின் முன்னாள் காதலன் தருண், ஜாமின் கேட்டு பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்து இருந்தார்.

அந்த மனு மீது விசாரணை நடந்து வந்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி விஸ்வநாத் கவுடர் நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us