sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போக்குவரத்து நெரிசல் நகரங்கள் பெங்களூருக்கு ஆறாவது இடம்

/

போக்குவரத்து நெரிசல் நகரங்கள் பெங்களூருக்கு ஆறாவது இடம்

போக்குவரத்து நெரிசல் நகரங்கள் பெங்களூருக்கு ஆறாவது இடம்

போக்குவரத்து நெரிசல் நகரங்கள் பெங்களூருக்கு ஆறாவது இடம்


ADDED : பிப் 04, 2024 11:44 PM

Google News

ADDED : பிப் 04, 2024 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கடந்த 2023ம் ஆண்டில், உலகளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், பெங்களூரு ஆறாவது இடத்திலும், புனே ஏழாவது இடத்திலும் உள்ளன.

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின், ஆம்ஸ்டர்டாமை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'டாம் டாம்' என்ற நிறுவனம், 2023ல் உலகளவில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வு, உலகம் முழுதும், 55 நாடுகளில் உள்ள 387 நகரங்களில் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையை, டாம் டாம் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில், முதலிடத்தில் பிரிட்டனின் லண்டன் இடம் பெற்றுள்ளது.

இங்கு போக்குவரத்து நெரிசலான நேரத்தில், சராசரியாக மணிக்கு, 14 கி.மீ., வேகத்தில் மட்டுமே வாகனத்தை ஓட்ட வேண்டும். அயர்லாந்து டப்ளின் இரண்டாவது இடத்திலும்; கனடாவின் டொரன்டோ மூன்றாவது இடத்திலும்; இத்தாலியின் மிலன் நான்காவது இடத்திலும்; பெருவின் லிமா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

இந்த பட்டியலில், கர்நாடக தலைநகர் பெங்களூரு ஆறாவது இடத்தில் உள்ளது. இங்கு, 10 கி.மீ., துாரத்தை கடக்க சராசரியாக ஆகும் நேரம், 28 நிமிடங்கள் 10 வினாடிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவின் புனே ஏழாவது இடத்தில் உள்ளது. இங்கு, 10 கி.மீ., துாரத்தை கடக்க சராசரியாக ஆகும் நேரம், 27 நிமிடங்கள் 50 வினாடிகள்.

செப்., 27 பெங்களூரில் வாகனத்தில் பயணிக்க மிகவும் மோசமான நாள் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us