sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'சிறுபான்மையினரை பாதுகாக்கும் பொறுப்பு வங்கதேசத்துக்கு உள்ளது': ஜெய்சங்கர்

/

'சிறுபான்மையினரை பாதுகாக்கும் பொறுப்பு வங்கதேசத்துக்கு உள்ளது': ஜெய்சங்கர்

'சிறுபான்மையினரை பாதுகாக்கும் பொறுப்பு வங்கதேசத்துக்கு உள்ளது': ஜெய்சங்கர்

'சிறுபான்மையினரை பாதுகாக்கும் பொறுப்பு வங்கதேசத்துக்கு உள்ளது': ஜெய்சங்கர்

23


ADDED : நவ 30, 2024 04:21 AM

Google News

ADDED : நவ 30, 2024 04:21 AM

23


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்கும் பொறுப்பு, அந்நாட்டின் இடைக்கால அரசுக்கு உள்ளது என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு உள்ளது. அக். 30ல் ஹிந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தில் வங்கதேச தேசியக் கொடியை அவமதித்ததாக, 'சம்மிலிதா சனாதனி ஜோதே' என்ற ஹிந்து அமைப்பின் தலைவரும், 'இஸ்கான்' எனப்படும், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகியுமான சின்மோய் கிருஷ்ண தாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரை விடுவிக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், வழக்கறிஞர் கொல்லப்பட்டார். வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் கடந்த சில மாதங்களாக அதிகரித்தபடி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பார்லி.,யில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ''வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்களை இந்தியா தீவிரமாக கவனித்து வருகிறது. வங்கதேசத்தின் அனைத்து குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான முதன்மைப்பொறுப்பு, அந்நாட்டின் இடைக்கால அரசிடம் உள்ளது.

''டாக்காவில் உள்ள இந்திய துாதரகம், ஹிந்துக்களின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகிறது. கைது செய்யப்பட்ட ஹிந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் தொடர்பான வழக்கு விசாரணை நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும்,'' என்றார்.

இதற்கிடையே, தேச துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சின்மோய் கிருஷ்ண தாஸ் உட்பட, 17 பேரின் வங்கிக் கணக்குகளை 30 நாட்களுக்கு முடக்க, வங்கதேச நிதி நுண்ணறிவு பிரிவு நேற்று உத்தரவிட்டது. சிறுபான்மையினர் விவகாரத்தில் இந்தியா இரட்டை வேடம் போடுவதாக வங்கதேச சட்ட ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இரு நாட்களுக்கு நாடு தழுவிய போராட்டத்தை விஷ்வ ஹிந்துபரிஷத் அமைப்புஅறிவித்துள்ளது.

எல்லை பிரச்னைக்கு தீர்வு

பார்லிமென்டில் நேற்று, இந்தியா - சீனா எல்லை பிரச்னை தொடர்பான கேள்விக்கு, பதில் அளித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: தென் அமெரிக்க நாடான பிரேசிலில் சமீபத்தில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபரை சந்தித்துப் பேசினார். அப்போது, எல்லை பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முறையாக கையாள வேண்டும் என்றும், அமைதியான சூழலுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்பட்டு விடக் கூடாதுஎன்றும், சீன அதிபரிடம், பிரதமர் சுட்டிக் காட்டினார். இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us