sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மோசடி கணக்குகளை முடக்க அதிகாரம் வேண்டும் வங்கிகள் கோரிக்கை

/

மோசடி கணக்குகளை முடக்க அதிகாரம் வேண்டும் வங்கிகள் கோரிக்கை

மோசடி கணக்குகளை முடக்க அதிகாரம் வேண்டும் வங்கிகள் கோரிக்கை

மோசடி கணக்குகளை முடக்க அதிகாரம் வேண்டும் வங்கிகள் கோரிக்கை


ADDED : ஏப் 13, 2025 09:50 PM

Google News

ADDED : ஏப் 13, 2025 09:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:சைபர் மோசடிகளை கட்டுப்படுத்த, சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்குகளில், வங்கி கணக்குகளை முடக்க வங்கிகளுக்கு உரிய அதிகாரம் அளிப்பது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலிக்க வேண்டும் என இந்திய வங்கிகள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.

'மியூல்' கணக்கு என்பது பண மோசடி, சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் உள்ளிட்ட நிதி சம்பந்தப்பட்ட குற்றங்களை எளிதாக்க பயன்படுத்தப்படும் வங்கி கணக்கு ஆகும். குற்றவாளிகள் இந்த கணக்கை பயன்படுத்தி சட்டவிரோத பணத்தை, வங்கிகள் வாயிலாக பரிமாற்றம் செய்கின்றனர்.

இதனால் அமலாக்கத்துறை சட்டவிரோத நிதி பரிமாற்றம் உள்ளிட்ட செயல்களை கண்காணிப்பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன.

பண மோசடி தடுப்பு சட்டத்தின் படி, நீதிமன்றம் அல்லது சட்ட அமலாக்கத்துறையின் முறையான அனுமதியின்றி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளை முடக்கவோ அல்லது தடுக்கவோ வங்கிகளுக்கு அதிகாரம் இல்லை.

ஆகையால், மியூல் கணக்குகள் வாயிலாக மேற்கொள்ளப்படும் சைபர் மோசடிகளை தடுக்க, அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெறுவதில் நேரத்தை வீணடிக்காமல், சட்டவிரோத பரிவர்த்தனைகளில் ஈடுபடும் கணக்குகளை முடக்க வங்கிகளுக்கு அதிகாரமளிப்பது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலிக்க வேண்டும் என இந்திய வங்கிகள் சங்கம் பரிந்துரைத்துள்ளது.






      Dinamalar
      Follow us