புதிய எம்.பி.,க்களை வரவேற்க தயாராகும் பார்லி., வளாகம்
புதிய எம்.பி.,க்களை வரவேற்க தயாராகும் பார்லி., வளாகம்
UPDATED : மே 17, 2024 08:31 PM
ADDED : மே 17, 2024 07:58 PM

புதுடில்லி : புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் மறுசீரமைப்பு பணிகள் முடிவடையாததால், புதிய எம்.பி.க்களுக்கு பார்லிமென்ட் இணைப்பு கட்டடத்தில் வரவேற்பு அளிக்க லோக்சபா செயலகம் முடிவு செய்துள்ளது.
நாடு முழுதும் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது. இதில் பதிவாகும் ஓட்டுகள், அடுத்த மாதம் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில், தேர்வாகும் எம்.பி.க்களை வரவேற்கும் வகையில் பார்லிமென்ட் வளாகங்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் ஒரு பகுதியில், மறுசீரமைப்புப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. எனினும், புதிய எம்.பி.,க்கள் வருகைக்கு முன் இப்பணிகள் முடிவடையாது என கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அவர்களை வரவேற்கும் வகையில் பார்லிமென்ட் இணைப்பு கட்டடத்தில் ஏற்பாடுகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளன.
முன்னதாக, தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்தின் மாலை முதல் புதிய எம்.பி.,க்கள் பார்லிமென்ட் வளாகம் நோக்கி படையெடுக்க துவங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

