sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழகத்தில் பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: தமிழக முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்

/

தமிழகத்தில் பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: தமிழக முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்

தமிழகத்தில் பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: தமிழக முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்

தமிழகத்தில் பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: தமிழக முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்

3


ADDED : பிப் 04, 2024 11:25 PM

Google News

ADDED : பிப் 04, 2024 11:25 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்: தமிழகத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு முன் வர வேண்டும் என தமிழகத்தின் முன்னாள் கவனர் பன்வாரிலால் புரோஹித் கூறி உள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரையில் நான்கு ஆண்டுகள் வரையில்தமிழகத்தின் கவர்னராக இருந்தவர் பன்வாரிலால் புரோஹித் .தொடர்ந்து பஞ்சாப் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் சொந்த காரணங்களுக்காக தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

முன்னதாக சண்டிகர் நகரில் வாழும் தமிழர்கள் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:.நான்கு வருடங்கள் நான் தமிழ்நாட்டில் இருந்தேன், நிறைய மகிழ்ந்தேன், அங்கு மிகுந்த கலாச்சாரம், பாசமுள்ள மனிதர்கள், எளிமையான மக்கள். தலைநகர் புது டில்லியாக இருந்த போதிலும் தற்போது குளிர் வாட்டி வதைக்கிறது.

இந்நிலையில் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் தமிழ்நாட்டில் நடக்கட்டும். கோடை காலத்தில் தலைநகர் டில்லியில் நடக்கட்டும் என்றார்

இது குறித்து சண்டிகரில் உள்ள டெவலப்மென்ட் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஸ்டிடியூட் (ஐடிசி) இயக்குனர் பிரமோத் குமார் கூறி இருப்பதாவது:பாராளுமன்றக் கூட்டத்தை நடத்தும் நடவடிக்கை தென் மாநில மக்களுக்கு நிச்சயமாக நிம்மதியாக இருக்கும், அங்கு ஒரு கூட்டத்தொடர் மற்றும் ஒருவித செயலகத்தை அமைத்தால், மக்கள் பயனடைவார்கள். தென் மாநிலங்களில் உள்ள அரசியலில் மாநில கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன, மேலும் இந்த நடவடிக்கை மாநில அரசியலை தேசிய அரசியலில் ஒருங்கிணைக்கும் திட்டமாக இருக்கலாம். சமூக, அரசியல் மற்றும் நிர்வாக மட்டங்களில் இது ஒரு நல்ல ஒருங்கிணைப்பு நடவடிக்கையாகும். இது மக்களைச் சென்றடைவதற்கான முயற்சியாகும்” என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் பஞ்சாபில் பணியாற்றி வரும்தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜே.எம்.பாலமுருகன் கூறுகையில், தாராளமயமாக்கலுக்குப் பிந்தைய காலத்தில் தமிழ்நாட்டின் அற்புதமான வளர்ச்சிக்கு சமூக நீதியும், உறுதியான நடவடிக்கையின் அடிப்படையிலான சமூகத் துறை மேம்பாடும் அடித்தளமாக உள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us