sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெண் பயிற்சி டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கொடுங்கள்; மே.வங்க அரசு மேல்முறையீடு!

/

பெண் பயிற்சி டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கொடுங்கள்; மே.வங்க அரசு மேல்முறையீடு!

பெண் பயிற்சி டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கொடுங்கள்; மே.வங்க அரசு மேல்முறையீடு!

பெண் பயிற்சி டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கொடுங்கள்; மே.வங்க அரசு மேல்முறையீடு!

22


ADDED : ஜன 21, 2025 11:49 AM

Google News

ADDED : ஜன 21, 2025 11:49 AM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த கீழமை கோர்ட் தீர்ப்புக்கு எதிராகவும், தூக்கு தண்டனை விதிக்கக் கோரியும் மே.வங்க அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.



மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு கோல்கட்டாவில், ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, ஜூனியர் டாக்டராக பணியாற்றி வந்த 31 வயது பெண், கடந்தாண்டு ஆக., 9ல் மருத்துவமனையின் கருத்தரங்க அரங்கில் பிணமாக கிடந்தார்.

கொலை நடந்த மறுதினம், சஞ்சய் ராய் என்ற இளைஞரை, போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின், குற்றவாளி சஞ்சய் ராய் மீது, பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் நேற்று (ஜன.,20) நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பிற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் டாக்டர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். ஆயுள் தண்டனை போதாது. தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், இன்று (ஜன.,21) குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த கீழமை கோர்ட் தீர்ப்புக்கு எதிராகவும், தூக்கு தண்டனை விதிக்கக் கோரியும் மே.வங்க அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

'ஏற்கனவே, குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிப்பதே அனைவரது விருப்பம்' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஆயுள் தண்டனை விதித்த கீழமை கோர்ட் தீர்ப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் மேற்குவங்க அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.






      Dinamalar
      Follow us