ADDED : மே 18, 2025 02:43 AM

பாலக்காடு : கேரளா மாநிலம், பாலக்காடு கல்பாத்தி அருகில் உள்ள சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவிலில், வைகாசி மாதம் கும்பாபிஷேக தின விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு பஜனோத்சவம், கும்பாபிஷேக தின விழா நேற்று முன்தினம் துவங்கியது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்து, விழாவை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக குழு உறுப்பினர்களான பரமேஸ்வரன், முரளி, வாசுதேவன், பாலகணேஷ், பாலசுப்பிரமணியன், ராம்பிரகாஷ் பங்கேற்றனர். தொடர்ந்து, லலிதா ராமமூர்த்தி குழுவினரின் பரதநாட்டியம் நடந்தது.
நாளை, 18ம் தேதி மாலை, 4:00 மணிக்கு ஸ்ரீருத்ரகான பாராயணம் நடக்கிறது. 24ம் தேதி அஷ்டபதி பஜனை, திவ்யநாமம், டோலோத்சவம், 24ம் தேதி ராதா கல்யாண உத்சவம், ஆஞ்சநேய உத்சவம், 26ம் தேதி நட்சத்திர சாந்தி ஹோமம், 27ம் தேதி லட்சார்ச்சனை, மாலையில் செண்டை மேளம் முழங்க 'காழ்ச சீவேலி', குடைமாற்றம் ஆகிய நிகழ்வுகள் நடக்கின்றன.
கும்பாபிஷேக தின நாளான 28ம் தேதி காலை 'காழ்ச சீவேலி' நிகழ்வு நடக்கிறது.