கிலோ ரூ.60 விலையில் 'பாரத் பருப்பு': சராசரியாக 45 ஆயிரம் டன் விற்பனை
கிலோ ரூ.60 விலையில் 'பாரத் பருப்பு': சராசரியாக 45 ஆயிரம் டன் விற்பனை
UPDATED : பிப் 12, 2024 11:49 AM
ADDED : பிப் 12, 2024 11:48 AM

புதுடில்லி: விலைவாசியை கட்டுப்படுத்தும் நோக்கில் 'பாரத்' என்ற பிராண்ட் பெயரில் கோதுமை மாவு, அரிசி விற்பனையை மத்திய அரசு செய்கிறது. அதேபோல், 'பாரத் டால்' என்ற பெயரில் கடலை பருப்பு அறிமுகம் செய்யப்பட்டு நாடு முழுதும் சராசரியாக மாதம் 45 ஆயிரம் டன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுதும் விளைச்சல் பாதிப்பால், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வெளிச்சந்தையில், கிலோ கோதுமை மாவு விலை, 60 ரூபாயாக உள்ளது. பொன்னி பழைய அரிசி விலை, 55 ரூபாயாக உள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்குடன் மத்திய அரசு, 'பாரத் ஆட்டா' என்ற பெயரில், கிலோ கோதுமை மாவு, 27.50 ரூபாய்க்கும், 'பாரத் ரைஸ்' என்ற பெயரில், கிலோ அரிசியை, 29 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறது. இதற்காக தமிழகத்திற்கு மட்டும் 1,000 டன் கோதுமை மாவு, 22,000 டன் பாரத் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டன.

