sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

46 ஆண்டுக்கு முன் நடுவானில் நடந்த 'கிடுகிடு' சம்பவம்...! இந்திராவுக்காக விமானம் கடத்தியவர் மரணம்...!

/

46 ஆண்டுக்கு முன் நடுவானில் நடந்த 'கிடுகிடு' சம்பவம்...! இந்திராவுக்காக விமானம் கடத்தியவர் மரணம்...!

46 ஆண்டுக்கு முன் நடுவானில் நடந்த 'கிடுகிடு' சம்பவம்...! இந்திராவுக்காக விமானம் கடத்தியவர் மரணம்...!

46 ஆண்டுக்கு முன் நடுவானில் நடந்த 'கிடுகிடு' சம்பவம்...! இந்திராவுக்காக விமானம் கடத்தியவர் மரணம்...!

12


ADDED : ஆக 24, 2024 07:44 AM

Google News

ADDED : ஆக 24, 2024 07:44 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: முன்னாள் பிரதமர் இந்திராவுக்காக விமானத்தை கடத்திய காங்கிரஸ் தலைவர் போலாநாத் பாண்டே காலமானார்.

கடத்தல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அவர் இந்திராவை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி விமானத்தை கடத்தியதில் நாடு முழுவதும் அறியப்பட்டார். நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், காலமானார். அவருக்கு வயது 71.

அஞ்சலி

லக்னோவில் வைக்கப்பட்டு உள்ள போலாநாத் பாண்டே உடல், பொதுமக்கள் மற்றும் கட்சியினரின் அஞ்சலிக்கு பின்னர் இன்று தகனம் செய்யப்படுகிறது. உ.பி.யின் முன்னாள் எம்.எல்.ஏ., முக்கிய பிரமுகராகவும் கட்சியினர் மத்தியில் செல்வாக்காக இருந்தவர்.

இந்தியன் ஏர்லைன்ஸ்

1978ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி IC 410 என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 152 பேருடன் கொல்கத்தாவில் இருந்து புதுடில்லிக்கு புறப்பட்டது. லக்னோ வந்த போது, விமானத்தின் 15வது வரிசையில் இருந்து போலாநாத் பாண்டேவும், உடன் வந்த தேவேந்திர பாண்டேவும் எழுந்தனர். நேராக காக்பிட் எனப்படும் விமானியின் அறைக்குள் நுழைந்தனர்.

பொம்மை துப்பாக்கி

பின்னர், நாங்கள் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். தமது கையில் ஒரு துப்பாக்கியை வைத்துக் கொண்டு, போலோநாத் பாண்டே விமானத்தை கடத்துவதாக அறிவித்தார். இந்திரா மற்றும் சஞ்சய் இருவர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், சிறையில் உள்ள இந்திராவை விடுதலை செய்ய வேண்டும் என்பதே கோரிக்கை என்றார்.

பேச்சுவார்த்தை

பதற்றம், பரபரப்புக்கு இடையில் விமானம் வாரணாசியில் இறங்கியது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்தது ஜனதா கட்சி. உ.பி. முதல்வராக இருந்த ராம் நரேஷ் யாதவை சந்தித்து கோரிக்கையை கூறினர். பலமணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், அரசு உறுதி அளிக்க, விமானம் புறப்பட்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. கோரிக்கை ஏற்கப்பட்டதால் போலாநாத் பாண்டே, தேவேந்திர பாண்டே இருவரும் சரண் அடைந்தனர்.

வாய்ப்பு

பின்னர் காலசக்கரங்கள் சுழல 1980ம் ஆண்டு இந்திரா பிரதமர் பதவியில் அமர்ந்தவுடன் அவர்கள் இருவர் மீதான வழக்குகள் கைவிடப்பட்டு உ.பி.யில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டு முறை எம்.எல்.ஏ., ஆகவும் இருந்தார் பாண்டே. இப்போது பதவி எதிலும் இல்லாத நிலையில், உடல் நலமின்றி இருந்த பாண்டே காலமானார்.






      Dinamalar
      Follow us