sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீஹாரில் தேர்தல் நெருங்கும் சூழலில் நிதிஷ் நடவடிக்கை; மாஜி அமைச்சர் உள்ளிட்ட 11 பேர் கட்சியில் இருந்து டிஸ்மிஸ்

/

பீஹாரில் தேர்தல் நெருங்கும் சூழலில் நிதிஷ் நடவடிக்கை; மாஜி அமைச்சர் உள்ளிட்ட 11 பேர் கட்சியில் இருந்து டிஸ்மிஸ்

பீஹாரில் தேர்தல் நெருங்கும் சூழலில் நிதிஷ் நடவடிக்கை; மாஜி அமைச்சர் உள்ளிட்ட 11 பேர் கட்சியில் இருந்து டிஸ்மிஸ்

பீஹாரில் தேர்தல் நெருங்கும் சூழலில் நிதிஷ் நடவடிக்கை; மாஜி அமைச்சர் உள்ளிட்ட 11 பேர் கட்சியில் இருந்து டிஸ்மிஸ்


ADDED : அக் 26, 2025 12:02 PM

Google News

ADDED : அக் 26, 2025 12:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா; ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 11 பேரை கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, கட்சியில் இருந்து நிதிஷ்குமார் நீக்கி உள்ளார்.

பீஹாரில் நவ.6 மற்றும் நவ.11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரசாரங்கள் என அனைத்துக் கட்சியினரும் தீவிர தேர்தல் பணிகளில் இறங்கி உள்ளனர்.

இந் நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் சைலேஷ் குமார் உள்பட 11 முக்கிய நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார் நீக்கி உள்ளார். இதுகுறித்து அறிவிப்பை பொதுச் செயலாளர் சந்தன்குமார் சிங் அறிக்கை மூலம் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது;

பீஹார் சட்டசபை பொதுத்தேர்தல் 2025 நடக்க உள்ள நிலையில், கட்சிக்கு விரோதமாகவும், சித்தாந்தத்திற்கு எதிராகவும் செயல்பட்ட 11 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நீக்கப்பட்டவர்களில் சைலேஷ்குமார் என்பவர் முன்னாள் அமைச்சர் ஆவர். இவருடன் முன்னாள் எம்எல்ஏக்கள் ஷ்யாம் பகதூர் சிங், சுதர்சன் குமார், முன்னாள் எம்எல்சிக்கள், சஞ்சய் பிரசாத், ரன்விஜய் சிங் ஆகியோரும் அடக்கம். இவர்கள் தவிர்த்து, மாவட்ட அளவிலான அமைப்புகளில் உள்ள 6 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us