ஏஐ பயன்படுத்தி பிரதமர் பற்றி அவதூறு: பீஹார் வாலிபர் கைது
ஏஐ பயன்படுத்தி பிரதமர் பற்றி அவதூறு: பீஹார் வாலிபர் கைது
ADDED : மார் 21, 2026 04:03 PM

புதுடில்லி: ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அவதூறு செய்யும் விதமாக, பிரதமர் மோடியின் படத்தை உருவாக்கி சமூக ஊடகங்களில் வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார்.
பீஹார் மாநிலம் அர்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் சித்தநாத் குமார். பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.,வை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ., மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண் அரசியல் கட்சித் தலைவர் ஆகியோர் படங்களை, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அவதூறாக சித்தரித்து உருவாக்கினார். அந்தப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
இதற்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து ஆய்வு செய்த டில்லி மாநகர போலீசின் சிறப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சித்தநாத் குமார் இருப்பிடத்தை அறிந்தனர்.
தனிப்படை போலீசார் பீஹார் சென்றனர். சித்தநாத் குமாரை கைது செய்து டில்லி அழைத்து வந்தனர். டில்லி லோதி காலனியில் உள்ள சிறப்பு பிரிவு அலுவலகத்தில் சித்தநாத்திடம் விசாரணை நடக்கிறது.

