sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சைலன்சர் அகற்றிய பைக்குகள் பறிமுதல்

/

சைலன்சர் அகற்றிய பைக்குகள் பறிமுதல்

சைலன்சர் அகற்றிய பைக்குகள் பறிமுதல்

சைலன்சர் அகற்றிய பைக்குகள் பறிமுதல்


ADDED : ஜூலை 18, 2025 08:21 PM

Google News

ADDED : ஜூலை 18, 2025 08:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முசாபர்நகர்:டில்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கன்வாரியர்கள் எனும் சிவ பக்தர்கள், சைலன்சர்கள் அகற்றப்பட்ட பைக்குகளில் பயணம் செய்வதை அறிந்து, அந்த பைக்குகளை போலீசார் கைப்பற்ற துவங்கியுள்ளனர்.

வட மாநிலங்களில் உள்ள சிவன் கோவில்களில், கன்வாரியர்கள் எனும் சிவ பக்தர்கள், சிரவண மாத துவக்கத்தில், யாத்திரை செல்வது வழக்கம். உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் நகரில் பாயும் புனித கங்கை நதியில் இருந்து நீர் எடுத்து வந்து, அதை தங்கள் ஊர் சிவன் கோவிலில் அபிஷேகம் செய்வது வழக்கம்.

அத்தகைய கன்வாரியார்களில் சிலர், சைலன்சர்கள் அகற்றிய பைக்குகளில், அதிக சத்தமாக செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. முசாபர் நகரின் எஸ்.பி., சத்யநாராயண பிரஜாபதி, அந்த பைக்குகளையும், அவற்றை ஓட்டி வந்தவர்களையும் கைது செய்ய உத்தரவிட்டார்.

மேலும், சைலன்சர் இல்லாத பைக்குகளை விற்ற ஹனி என்ற கடைக்காரரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசாரின் அதிரடி நடவடிக்கையில், 15 பைக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன; ஏராளமான சைலன்சர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us