sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'பயோமெட்ரிக்' செயல்முறை மீண்டும் துவங்கும்: ஹிமந்த பிஸ்வ சர்மா

/

'பயோமெட்ரிக்' செயல்முறை மீண்டும் துவங்கும்: ஹிமந்த பிஸ்வ சர்மா

'பயோமெட்ரிக்' செயல்முறை மீண்டும் துவங்கும்: ஹிமந்த பிஸ்வ சர்மா

'பயோமெட்ரிக்' செயல்முறை மீண்டும் துவங்கும்: ஹிமந்த பிஸ்வ சர்மா


ADDED : மார் 16, 2024 11:37 PM

Google News

ADDED : மார் 16, 2024 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவஹாத்தி : ''குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், தற்போது ஒரு தெளிவு கிடைத்துள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு புதுப்பித்தலின் போது முடக்கப்பட்ட பயோமெட்ரிக் செயல்முறை மீண்டும் துவங்கும்,'' என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

ஆலோசனை


வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு, என்.ஆர்.சி., எனப்படும், தேசிய குடிமக்கள் பதிவேடு, 2019 ஆக., 31ல் வெளியிடப்பட்டது.

இதில், 3.4 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், 19 லட்சம் பேர் பதிவேட்டில் இடம் பெறவில்லை. மேலும், 27 லட்சம் பேரின் பயோமெட்ரிக் தரவுகள் முடக்கப்பட்டதால், அவர்களால் 'ஆதார்' பெற முடியவில்லை.

இந்நிலையில், குவஹாத்தியில் செய்தியாளர்களிடம் நேற்று முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியதாவது:

பயோமெட்ரிக் விவகாரம் தொடர்பாக, அனைத்து அசாம் மாணவர் சங்கம் மற்றும் பிற அமைப்புகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.

தேர்தலுக்குப் பின் தீர்வு எட்டப்படும். 2014-க்குப் பின் நம் நாட்டுக்கு வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்பது தற்போது தெளிவாகிவிட்டது.

சிக்கல்


தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை கிடைக்கும். பயோமெட்ரிக் முடக்கப்பட்டு உள்ளதால், ரேஷன் கார்டு மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதில் நிச்சயம் ஒரு தீர்வு காணப்படும். குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் மக்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us