sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பா.ஜ. நிர்வாகி கொலை: பி.எப்.ஐ. அமைப்பினர் 15 பேர் குற்றவாளிகள்

/

பா.ஜ. நிர்வாகி கொலை: பி.எப்.ஐ. அமைப்பினர் 15 பேர் குற்றவாளிகள்

பா.ஜ. நிர்வாகி கொலை: பி.எப்.ஐ. அமைப்பினர் 15 பேர் குற்றவாளிகள்

பா.ஜ. நிர்வாகி கொலை: பி.எப்.ஐ. அமைப்பினர் 15 பேர் குற்றவாளிகள்


ADDED : ஜன 21, 2024 02:10 AM

Google News

ADDED : ஜன 21, 2024 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆலப்புழா, கேரளாவின் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் ஸ்ரீனிவாசன், பா.ஜ.,வின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநில செயலராக இருந்தார்.

வழக்கறிஞரான இவர், 2021ல், அவரது குடும்பத்தார் கண் எதிரில், மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப் பட்டனர்.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படும் நிலையில், இது தொடர்பான விசாரணை, மாவேலிக்கரா கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.

அப்போது, 1,000க்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டன.

அரசு தரப்பில் 156 பேர் சாட்சி அளித்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியாவைச் சேர்ந்த 15 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.

இவர்களுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us