sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்திய தேசியக்கொடியுடன் ஸ்காட்லாந்து சிகரத்தில் அண்ணாமலை!

/

இந்திய தேசியக்கொடியுடன் ஸ்காட்லாந்து சிகரத்தில் அண்ணாமலை!

இந்திய தேசியக்கொடியுடன் ஸ்காட்லாந்து சிகரத்தில் அண்ணாமலை!

இந்திய தேசியக்கொடியுடன் ஸ்காட்லாந்து சிகரத்தில் அண்ணாமலை!

27


ADDED : செப் 28, 2024 01:42 PM

Google News

ADDED : செப் 28, 2024 01:42 PM

27


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓஸ்லோ; ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை சாதனை படைத்துள்ளார். இதனை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்பதாக அவர் கூறி உள்ளார்.

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் கல்வி பயில பா.ஜ., தலைவர் அண்ணாமலை சென்றிருக்கிறார். படிப்பை முடித்த பின்னர் வரும் டிசம்பர் மாதம் சென்னை திரும்புகிறார்.

இந் நிலையில், ஸ்காட்லாந்தில் உள்ள 1,345 மீட்டர் உயரம் கொண்ட பென் நெவிஸ் சிகரம் மீது தேசியக்கொடியுடன் அண்ணாமலை ஏறி உள்ளார். இந்த சாதனையை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்பதாக தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் போட்டோவுடன் பதிவிட்டு உள்ளார்.

அந்த பதிவில் அண்ணாமலை கூறி இருப்பதாவது; ஸ்காட்லாந்தில் உள்ள பென் நெவிஸ் சிகரம் பிரிட்டனின் உயரமான சிகரம். இந்த சிகரத்தில் ஏற ஒரு வாய்ப்பு கிடைத்தது. சவாலை ஏற்றுக் கொண்டு உச்சியை அடைந்தேன்.

எனது இந்த சாதனையை நான் பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன். அவரின் தொலைநோக்கு பார்வையான மிஷன் லைப் என்பது ஒரு நிலையான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதையும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்ட ஒரு பிரசாரம்.

இந்த பயணம் மிகவும் அறிவூட்டுவதாக இருந்தது. எங்கள் பயணம் முழுவதும் பிளாஸ்டிக் இல்லாத, தூய்மையை பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தியது.

இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையேயான நீடித்த நட்பின் அடையாளமான பென் நெவிஸ் சிகரத்தில் மூவர்ணக்கொடியுடன் ஏறியதில் பெருமை அடைகிறேன்.

இவ்வாறு தமது பதிவில் அண்ணாமலை கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us