sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விநாயகர் சிலை தாமதம் மேயர் மீது பா.ஜ., புகார்

/

விநாயகர் சிலை தாமதம் மேயர் மீது பா.ஜ., புகார்

விநாயகர் சிலை தாமதம் மேயர் மீது பா.ஜ., புகார்

விநாயகர் சிலை தாமதம் மேயர் மீது பா.ஜ., புகார்


ADDED : மார் 08, 2024 02:03 AM

Google News

ADDED : மார் 08, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயபுரா: விஜயபுரா மாநகராட்சி அலுவலக வளாகத்தில், விநாயகர் சிலை நிறுவுவதில் தாமதம் செய்வதாக, காங்கிரஸ் மேயர் மீது பா.ஜ., கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

விஜயபுரா மாநகராட்சி மேயராக காங்கிரசின் மெஹ்ஜபீன் ஹொர்டி உள்ளார். கடந்த மாதம் நடந்த ஆலோசனை கூட்டத்தில், மாநகராட்சி அலுவலகம் முன் விநாயகர் சிலை நிறுவுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கட்சி பாகுபாடின்றி கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர். புதிய விநாயகர் சிலையும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் சிலை இன்னும் நிறுவப்படவில்லை. இதற்கு மேயர் மெஹ்ஜபீன் ஹொர்டியும், கமிஷனர் பதுரூதீன் தான் காரணம் என்று, பா.ஜ., கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ராமர் கோவில் திறப்பு விழாவில் நடந்து கொண்டது போன்று, விநாயகர் சிலை வைப்பதிலும், காங்கிரஸ் அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 'சிலையை உடனடியாக நிறுவ வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம்' என, பா.ஜ., கவுன்சிலர்கள் எச்சரித்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us