sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆட்சியில் நீடிக்கும் அருகதை இல்லை சட்ட மேலவையில் பா.ஜ., தர்ணா

/

ஆட்சியில் நீடிக்கும் அருகதை இல்லை சட்ட மேலவையில் பா.ஜ., தர்ணா

ஆட்சியில் நீடிக்கும் அருகதை இல்லை சட்ட மேலவையில் பா.ஜ., தர்ணா

ஆட்சியில் நீடிக்கும் அருகதை இல்லை சட்ட மேலவையில் பா.ஜ., தர்ணா


ADDED : மார் 01, 2024 06:27 AM

Google News

ADDED : மார் 01, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பட்ஜெட் விவாதத்தின்போது, எதிர்க்கட்சியான பா.ஜ., தர்ணா நடத்தியதால், சட்டமேலவையில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

கர்நாடக சட்டமேலவையில், நேற்று பட்ஜெட் தொடர்பாக நடந்த விவாதம்:

பா.ஜ., - கோட்டா சீனிவாச பூஜாரி: விதான்சவுதா வளாகத்தில், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என, கோஷமிட்டவர்களை கைது செய்யவில்லை. இந்த அரசுக்கு, ஆட்சியில் நீடிக்கும் அருகதை இல்லை.

அமைச்சர் போசராஜ்: இது பற்றி ஏற்கனவே விரிவாக விவாதம் நடந்துள்ளது. சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் சிறப்பாக பதில் அளித்துள்ளார்.

காங்கிரஸ் கொறடா சலீம்: எதிர்க்கட்சியினருக்கு விவாதிக்க எந்த விஷயங்களும் இல்லை. ஒரே விஷயத்தை அவ்வப்போது பேசி, அவையின் நேரத்தை பாழாக்குகின்றனர்.

சட்டமேலவை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவையின் விதிமுறையை பின்பற்றாமல், அவை தலைவரின் பீடத்துக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர்.

பாஜ., தலைமை கொறடா ரவிகுமார்: சம்பவம் நடந்து 36 மணி நேரம் கடந்தும், குற்றவாளியை கைது செய்யவில்லை. அவர்களை காப்பாற்ற முயற்சிக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இது குறித்து, முதல்வர், உள்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும்.

சட்டமேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி: ஏற்கனவே விவாதம் முடிந்துள்ளது. அரசு பதில் அளித்துள்ளது. இந்த விஷயம் பற்றி விவாதிக்க, வாய்ப்பளிக்க மாட்டேன்.

பா.ஜ., உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்து, அவைத் தலைவர் இருக்கைக்கு முன் சென்று, தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us