sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

என் தொலைபேசி ஒட்டு கேட்பு; பா.ஜ., - எம்.எல்.ஏ., 'பகீர்'

/

என் தொலைபேசி ஒட்டு கேட்பு; பா.ஜ., - எம்.எல்.ஏ., 'பகீர்'

என் தொலைபேசி ஒட்டு கேட்பு; பா.ஜ., - எம்.எல்.ஏ., 'பகீர்'

என் தொலைபேசி ஒட்டு கேட்பு; பா.ஜ., - எம்.எல்.ஏ., 'பகீர்'


ADDED : ஏப் 05, 2025 01:50 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராய்ச்சூர் : ''என் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்கப்படுகிறது,'' என்று, ராய்ச்சூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சிவராஜ் பாட்டீல் பகீர் தகவல் கூறி உள்ளார்.

ராய்ச்சூர் நகர தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சிவராஜ் பாட்டீல். இவர், நேற்று காலை ராய்ச்சூர் எஸ்.பி., அலுவலகத்திற்கு சென்று, எஸ்.பி., புட்டமாதய்யாவை சந்தித்து பேசினார். 'எனது தொலைபேசி உரையாடல், கடந்த சில மாதங்களாக ஒட்டு கேட்கப்படுகிறது.

மொபைல் போன் டவரை வைத்து நான் எங்கு உள்ளேன் என்று, சிலர் கண்காணிக்கின்றனர். இத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார்.

இதுகுறித்து புகார் அளித்தால், உரிய விசாரணை நடத்துவதாக எஸ்.பி., புட்டமாதய்யா பதில் அளித்தார். விரைவில் புகார் செய்வதாக கூறிவிட்டு சிவராஜ் பாட்டீல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டியில், ''இது பற்றி ராய்ச்சூர் எஸ்.பி.,யிடம் பேசி விபரங்களை பெற்று கொள்வேன். எம்.எல்.ஏ., கூறியது உண்மை என்றால், விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவேன்,'' என்றார்.

அரசியல்வாதிகளின் மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்படுவதாக, சில தினங்களுக்கு முன்பு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக அரசியலுக்கும், தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பிற்கும் பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. கடந்த 1988ம் ஆண்டு முதல் முறையாக தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அப்போது ஆட்சியில் இருந்த ராமகிருஷ்ண ஹெக்டேயின் அரசு கவிழ்ந்தது.

மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி, முதல்வராக இருந்த போது, மடாதிபதி ஒருவரின் மொபைல் போன் ஒட்டு கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது, மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us