sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அமைச்சர் குறித்து அவதூறு: பா.ஜ., எம்.எல்.சி., கைது

/

அமைச்சர் குறித்து அவதூறு: பா.ஜ., எம்.எல்.சி., கைது

அமைச்சர் குறித்து அவதூறு: பா.ஜ., எம்.எல்.சி., கைது

அமைச்சர் குறித்து அவதூறு: பா.ஜ., எம்.எல்.சி., கைது


ADDED : டிச 19, 2024 08:32 PM

Google News

ADDED : டிச 19, 2024 08:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: சட்டசபையில், கர்நாடக அமைச்சரை அவதூறாக விமர்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பா.ஜ., எம்.எல்.சி., சி.டி.ரவியை போலீசார் கைது செய்தனர்.அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது தொடர்பாக, கர்நாடக சட்டமேலவையில் அமளி ஈடுபட்டது. அப்போது, காங்., பா.ஜ., உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, பா.ஜ., எம்.எல்.சி.,யான சி.டி.ரவி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை விமர்சித்து பேசினார். இதற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெபால்கர் பதிலடி கொடுத்தார். அப்போது, அமைச்சரை நோக்கி சி.டி., அவதூறாக விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து லட்சுமி ஹெபால்கர், அவைத்தலைவரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக, அவர் அவர் ஆலோசனை நடத்தினார்.

இவ்விவகாரம் குறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. அவர் மீது புதிய சட்டப்பிரிவு 75 மற்றும் 79 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையத் தொடர்ந்து சி.டி.ரவியை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us