sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் பா.ஜ., தேசிய குழுக் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

/

டில்லியில் பா.ஜ., தேசிய குழுக் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

டில்லியில் பா.ஜ., தேசிய குழுக் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

டில்லியில் பா.ஜ., தேசிய குழுக் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

4


UPDATED : பிப் 17, 2024 12:18 PM

ADDED : பிப் 17, 2024 12:16 PM

Google News

UPDATED : பிப் 17, 2024 12:18 PM ADDED : பிப் 17, 2024 12:16 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: லோக்சபா தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், பா.ஜ.,வின் இருநாள் தேசிய குழு கூட்டம் புதுடில்லியில் இன்று துவங்கியது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அரங்கில் வைக்கப்பட்டிருந்த மத்திய அரசின் சாதனைகள் குறித்த கண்காட்சியை பார்வையிட்டார்.

லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. இதற்கான பணிகளை தலைமை தேர்தல் கமிஷன் முன்னெடுத்துள்ளது. தேர்தலை ஒட்டி காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரங்களை துவக்கி உள்ளன.

இந்நிலையில், பா.ஜ.,வின் தேசிய குழு கூட்டம் டில்லியில் இன்று துவங்கியது. அங்குள்ள பாரத் மண்டபத்தில் கட்சியின் தேசிய தலைவர் .நட்டா தலைமையில் இரண்டு நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மோடியை, சால்வை அணிவித்து நட்டா வரவேற்று அழைத்து சென்றார்.

பா.ஜ., தேசிய குழுக்கூட்டத்தை முன்னிட்டு, மாநாட்டு அரங்கில் பா.ஜ., அரசின் சாதனைகளை விளக்கும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை பிரதமர் மோடி, நட்டா ஆகியோர் பார்வையிட்டனர்.

நாளை பிரதமர் உரை

இக்கூட்டத்தில், லோக்சபா தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தேர்தல் யுக்திகள், கருத்துக்கணிப்பு ஆய்வுகள் குறித்தும் இரண்டு நாள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. நாளை (பிப்.18) பா.ஜ.,வின் முக்கிய கூட்டத்தின் போது மோடி அரசின் 10 ஆண்டு கால சாதனை குறித்து தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, சட்டப்பிரிவு 370 ரத்து, ஜி- 20 மாநாடு நிகழ்வு போன்றவற்றை வெற்றிகரமாகச் செய்த பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நிறைவு உரை ஆற்ற உள்ளார்.






      Dinamalar
      Follow us