sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்திய வளர்ச்சியை சீர்குலைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை சதி பா.ஜ.,பகிரங்க குற்றச்சாட்டு

/

இந்திய வளர்ச்சியை சீர்குலைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை சதி பா.ஜ.,பகிரங்க குற்றச்சாட்டு

இந்திய வளர்ச்சியை சீர்குலைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை சதி பா.ஜ.,பகிரங்க குற்றச்சாட்டு

இந்திய வளர்ச்சியை சீர்குலைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை சதி பா.ஜ.,பகிரங்க குற்றச்சாட்டு

32


UPDATED : டிச 07, 2024 09:09 AM

ADDED : டிச 06, 2024 11:42 PM

Google News

UPDATED : டிச 07, 2024 09:09 AM ADDED : டிச 06, 2024 11:42 PM

32


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி 'அதானி கிரீன் எனர்ஜி' நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதித்துறை சுமத்தியுள்ள குற்றச்சாட்டு விவகாரம், நம் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரையே ஸ்தம்பிக்க வைத்துஉள்ளது.

அதுமட்டுமின்றி, பெகாசஸ் உளவு, ஹிண்டன்பர்க் அறிக்கை உட்பட, நம் பார்லி., கூட்டத் தொடருக்கு முன் இதுபோன்ற அறிக்கைகளை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடுவதில் மிகப்பெரிய சதி இருப்பதாக, பா.ஜ., -- எம்.பி.,க்கள் பார்லிமென்டில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

அமெரிக்க, 'டீப் ஸ்டேட்' அமைப்பு, அந்நாட்டின் சில செய்தியாளர்கள் குழு மற்றும் காங்கிரஸ் எம்.பி., ராகுலுடன் கூட்டு சேர்ந்து நம் நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்டு உள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த, ஓ.சி.சி.ஆர்.பி., எனப்படும், புலனாய்வு பத்திரிகையாளர்களுக்கான அமைப்புடன் கைகோர்த்து, அதானி நிறுவனத்தை குறிவைத்தும், பிரதமர் மோடியுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.

இந்த சதியில் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு நேரடியாக சம்பந்தம் உள்ளது. இந்த ஓ.சி.சி.ஆர்.பி., அமைப்புக்கு அமெரிக்க அரசு நேரடியாக பண உதவிகளை செய்து வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க, 'டீப் ஸ்டேட்' சதிக்கு, ஓ.சி.சி.ஆர்.பி., கேடயமாக பயன்படுத்தப்படுகிறது.

இதை பிரான்ஸ் நாட்டு செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. சில அமெரிக்க நிறுவனங்களும், அந்நாட்டு கோடீஸ்வர தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸ் மற்றும் ராகுல் இணைந்து இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களில் கூட்டுசதி செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us