ADDED : பிப் 09, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்தில், கருப்பு மை பூசி போராட்டம் நடத்திய மாணவர் காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகாவுக்கு வழங்க வேண்டிய, மானியம், வரி பங்கு, வறட்சி நிவாரண நிதி வழங்குவதில், மத்திய அரசு பாரபட்சம் பார்ப்பதாக மாநில காங்கிரசார் குற்றஞ்சாட்டி நேற்று முன் தினம் புதுடில்லியில் போராட்டம் நடத்தியது.
இதற்கிடையில், மாணவர் காங்கிரசார், பெங்களூரு அலி அஸ்கார் சாலையில் உள்ள, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்தில், கருப்பு மை பூசினர். அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர். கருப்பு மை அழிக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.

